திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
திருப்பூர்: இன்று மே 12, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்களின் அர்ப்பணிப்பு சேவையை போற்றும் மற்றும் அவர்களது கடமையை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செவிலியர் குலவிளக்காக போற்றப்படும் “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் மருத்துவத் துறையில் செவிலியர்களின் ஒப்பற்ற சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செவிலியர் பள்ளி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
இதில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, நோயாளிகளுக்கு பாகுபாடின்றி தார்மீக அடிப்படையில் அர்ப்பணிப்புடன் சேவை செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள், “ஆரோக்கியமான சமுதாயம் அமைப்போம்”, “செவிலியர் பணியே புனிதமானது”, “நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
முன்னதாக, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி செவிலியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
செவிலியர் குலவிளக்காக போற்றப்படும் “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் மருத்துவத் துறையில் செவிலியர்களின் ஒப்பற்ற சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செவிலியர் பள்ளி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
இதில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, நோயாளிகளுக்கு பாகுபாடின்றி தார்மீக அடிப்படையில் அர்ப்பணிப்புடன் சேவை செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள், “ஆரோக்கியமான சமுதாயம் அமைப்போம்”, “செவிலியர் பணியே புனிதமானது”, “நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
முன்னதாக, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி செவிலியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.