உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.


திருப்பூர்: இன்று மே 12, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்களின் அர்ப்பணிப்பு சேவையை போற்றும் மற்றும் அவர்களது கடமையை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



செவிலியர் குலவிளக்காக போற்றப்படும் “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் மருத்துவத் துறையில் செவிலியர்களின் ஒப்பற்ற சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.



அதன்படி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செவிலியர் பள்ளி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

இதில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, நோயாளிகளுக்கு பாகுபாடின்றி தார்மீக அடிப்படையில் அர்ப்பணிப்புடன் சேவை செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள், “ஆரோக்கியமான சமுதாயம் அமைப்போம்”, “செவிலியர் பணியே புனிதமானது”, “நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

முன்னதாக, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி செவிலியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...