கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.


கோவை : மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள்மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 4,765 டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளை அடையாளம் காண அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், வழிபாட்டு தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 255 கடைகள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மொத்தம் 717 கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை வடக்கு பகுதியில் 156 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 128 கடைகளும் உள்ளன.

இதில் கோவை வடக்கு பகுதியில் 48 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 21 கடைகளும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வருவதால், மொத்தம் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.

மேலும், 1557, 1603, 1846 மற்றும் 1662 ஆகிய எண்களைக் கொண்ட 4 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 1662 என்ற எண்ணுடைய கடை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்திலும், 2023ஆம் ஆண்டு. வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...