மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டவர்களில் 9 பேர் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 9 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்ற மாணவர் 1050 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் ராமநாதன். ராமநாதன் 3-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை இடை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் துணி நூல்களை எடுக்கும் (பிசிறு வெட்டுதல்) வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோவையை சேர்ந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள் ராமநாதன மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர்.

தொடர்ந்து படித்து வந்த ராமநாதன் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு தேர்விற்கான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் ராமநாதன் ஆயிரத்து 50 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

இதுகுறித்து, ராமநாதன் கூறுகையில், குழந்தை தொழிலாளிகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டுமென்பதே தனது விருப்பம். குழந்தை தொழிலாளியாக உள்ளவர்கள் தன்னைபோல மீண்டு வரவேண்டும். 

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பாடத்தை தேர்வு செய்ய உள்ளேன். தமிழாசிரியராக வரவேண்டும் என்பதே தனது விருப்பம்" என்றார்.

குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட ராமநாதன் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து மாணவர்களின் தன்னம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டதாக ராமநாதனின் ஆசிரியர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தொழிலாளியாக இருந்தால் அவர்களை மீட்டு மறுவாழ்வும், கல்வியும் வழங்கி வருவதாகவும், மாணவர்கள் தொடர்ந்து படிக்க உயர் கல்விக்கான உதவித் தொகையும் அரசு வழங்கி வருவதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருவதாகவும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.

கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக வறுமையை கடந்து அசத்தியுள்ள ராமநாதன், மற்ற மாணவர்களுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார் என்றால், அதுமிகையல்ல.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...