மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டவர்களில் 9 பேர் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 9 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்ற மாணவர் 1050 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் ராமநாதன். ராமநாதன் 3-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை இடை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் துணி நூல்களை எடுக்கும் (பிசிறு வெட்டுதல்) வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோவையை சேர்ந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரிகள் ராமநாதன மீட்டு பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர்.

தொடர்ந்து படித்து வந்த ராமநாதன் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு தேர்விற்கான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் ராமநாதன் ஆயிரத்து 50 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

இதுகுறித்து, ராமநாதன் கூறுகையில், குழந்தை தொழிலாளிகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டுமென்பதே தனது விருப்பம். குழந்தை தொழிலாளியாக உள்ளவர்கள் தன்னைபோல மீண்டு வரவேண்டும். 

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பாடத்தை தேர்வு செய்ய உள்ளேன். தமிழாசிரியராக வரவேண்டும் என்பதே தனது விருப்பம்" என்றார்.

குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட ராமநாதன் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து மாணவர்களின் தன்னம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டதாக ராமநாதனின் ஆசிரியர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.

14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தொழிலாளியாக இருந்தால் அவர்களை மீட்டு மறுவாழ்வும், கல்வியும் வழங்கி வருவதாகவும், மாணவர்கள் தொடர்ந்து படிக்க உயர் கல்விக்கான உதவித் தொகையும் அரசு வழங்கி வருவதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருவதாகவும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.

கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக வறுமையை கடந்து அசத்தியுள்ள ராமநாதன், மற்ற மாணவர்களுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார் என்றால், அதுமிகையல்ல.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...