வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காட்டூர் சூரியன்காடு பகுதியில் கஞ்சா விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காட்டூர் சூரியன்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார், காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது வீட்டின் அருகே சுமார் 7 அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. அந்த செடியை அங்கேயே தீ வைத்து அழித்தனர். இதுதொடர்பாக கோவிந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட கோவிந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞர் வெ.சிவகுமார் ஆஜரானார். இந்த தீர்ப்பு போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...