கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Coimbatore:

இதுதொடா்பாக கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை-அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபா்பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. 



இப்பணிகள் இன்று (மே 14) முதல் வரும் 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாள்களுக்கு தொடா்ச்சியாக நடைபெறவுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பணி தடையின்றி நடப்பதை உறுதி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட இந்த 5 நாள்களிலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜிடி நாயுடு உயா்நிலை மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

வாகன ஓட்டிகள், காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...