சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்.


Coimbatore: சனாதன தர்மத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வருவதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.



இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் (இளைஞர் அணி) கே. சூர்யா அளித்த மனுவில், கடந்த 2023ஆம் ஆண்டு சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் மீது ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த நிலையில், மே 2026இல் தமிழக சட்டமன்றத்தில் “சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்” என அவர் மீண்டும் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படும் மதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்துக்கள் கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதோடு, சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்தி பொது அமைதியை பாதிக்கும் சூழலை உருவாக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் ஆசான் மௌலானா ஆகியோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்து, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...