கோவையில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி திருமுகச்சிலை கின்னஸ் விருது

தமிழகத்தின் கோவையில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி திருமுகச்சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை என்று  கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

இதை பற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகம் கூறுவதாவது: 

"உலகிலேயே மிகப்பெரிய மார்பளவுச் சிலையின் அளவு - உயரம் 34.24 மீட்டர் 112 அடி 4 அங்குலம், அகலம் 24.99 மீட்டர் 81 அடி 11.8 அங்குலம், நீளம் 44.9 மீட்டர் 147 அடி 3.7 அங்குலம். இந்த சாதனையை தமிழ்நாட்டின் ஈஷா அறக்கட்டளை செய்ததாக 11 மார்ச் 2017 அன்று உறுதி செய்கிறோம்."

இந்த சாதனை ஈஷாவிற்குகிடைத்துள்ள இரண்டாவது கின்னஸ் சாதனை விருதாகும். ஏற்கனவே ஈஷா அறக்கட்டளை அக்டோபர் 17 2006 அன்று 852,587 மரக்கன்றுகளை, தமிழ்நாட்டில் நட்டதற்காக கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் திருமுகச்சிலையை வடிவமைக்க 2.5 ஆண்டுகள்ஆனதாகவும், அதை நிர்மாணிக்க 8 மாதங்கள் மட்டுமே ஆனதாகவும், அதற்கு காரணம் இதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டார்களின் அர்ப்பணிப்புதான் என்றும் ஈஷாவின் நிறுவனர் சத்குரு இச்சிலை திறப்பின் போது கூறியிருந்தார்.

மக்களுக்கு ஊக்கம் ஊட்டிடும் ஒரு பிரம்மாண்ட அடையாளம் தான் இந்த முகம். மனிதர்கள் தன்னிலை மாற்றத்தை கொண்டு வரவிரும்பினால், அதற்கான தீர்வை தங்களுக்குள்ளேயே தேடி உணர்ந்திட ஆதியோகி ஒரு அடையாளமாக, குறியீடாக இருந்து ஊக்குவித்திட அமைந்துள்ளார். முதல் யோகியான ஆதியோகி, மனிதனின் தன்னிலை மாற்றத்திற்கான 112 வழிமுறைகளை வழங்கினார். அதன் குறியீடாகவே 112 அடி உயரச்சிலை அமைந்துள்ளது.

யோகபாரம்பரியத்தில் சிவனையோக விஞ்ஞானத்தின் மூலமான முதல் யோகியாக குருவாக பார்க்கின்றனர். இதை போன்று மேலும் மூன்று 112 அடி முகங்கள் இந்தியாவின் மூன்று மூலைகளில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...