கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வெரைட்டிஹால் போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கோவை: கோவை தெலுங்கு வீதியில் காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.



சோதனையில்தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவரின் பெயர்பிரகாஷ் என்பதும் அவர் அங்கு கடை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, கடையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு சுமார் 700 கிலோ அளவிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வெரைட்டிஹால் போலீசார் 700 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன், பிரகாஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக சுற்றுச்சூழல் தினம்: துணிப்பை தானியங்கி இயந்திரம் திறந்து வைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) மனிதச் சங்கிலி, மரக்கன்று வழங்கல், சு...

TNEB Urges Consumers to Use ‘Minnagam’ Helpline for Power-Related Complaints

The Tamil Nadu Electricity Board (TNEB) has advised consumers to report power outages, Fuse Off Calls (FOC), low-voltage...

மின்தடை புகார்களுக்கு ‘மின்னகம்’ சேவையை பயன்படுத்த மின்வாரியம் அறிவுறுத்தல்

மின்தடை,!ஃபியூஸ் ஆஃப் கால் (FOC), குறைந்த மின்னழுத்தம் மற்றும் பிற மின்விநியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களை, 24 மணி நே...

பீளமேடு வார்டு 27-ல் சுகாதார மையம், பள்ளி, தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆரம்ப சுகாதார மையம், பள்ளியில் புத்தக வழங்கல், சாக்க...

கோவை மத்திய சிறையில் காவலர் மீது கைதிகள் கூட்டு தாக்குதல் - மூவர் மீது வழக்கு

கோவை மத்திய சிறையில் ஒட்டுக்கேட்பதை தடுத்த காவலர் வெள்ளைப்பாண்டியை கைதிகள் ஆனந்த், ஜெயமணி உள்ளிட்ட மூன்று பேர் சரமாரியாக...

கோவையில் சுவரொட்டி ஒட்டியவருக்கு ரூ.10,000 அபராதம்: மேலும் கடும் நடவடிக்கை எச்சரிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ், சுவரொட்டிகளை அகற்றவும், தொட...