குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: கோவை: குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், “எங்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து பல்வேறு தொழில் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தோம். குறிப்பாக குறு, சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினோம்” என்றார்.

மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SGST வணிகவரி துறை, 2007 முதல் 2022 வரை முடிக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் கோரி, ஆயிரக்கணக்கான தொழில் முனைவோருக்கு அபராதம் விதித்து வருவதாகவும், பழைய கணக்குகளை சமர்ப்பிக்க கடுமையான நெருக்கடி அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

“பல ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குகளை கேட்டு தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்குப் பதிலாக, நடப்பு கணக்குகளை மட்டும் சரிபார்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்,” என ஜேம்ஸ் தெரிவித்தார்.

தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்ததாக, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சவுந்தரகுமார், ரவீந்திரன், சுரேந்திரன், சுரேஷ், பாண்டியன், சங்கரநாராயணன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...