கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் துறை ₹19,500 அபராதம் விதித்து எச்சரிக்கை வழங்கியது.


Coimbatore: கோவை சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில், இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி மற்றும் ஆட்டம் போட்டபடி வேகமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, வைரலான வீடியோவை அடிப்படையாக கொண்டு வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கோவை மாநகர காவல் துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் பொதுப் பாதையில் பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தாக வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு மொத்தமாக ₹19,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், வாகனத்தை இயக்கிய நான்கு இளைஞர்களையும் காவல் துறையினர் எச்சரித்து, பொதுச் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பினர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...