உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலவச BP பரிசோதனை, உணவு ஆலோசனை, பிசியோதெரபி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.


Coimbatore: உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு, GKNM Hospital மருத்துவமனையின் IOP வளாகத்தில் மே 18 முதல் மே 20 வரை தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு மருத்துவக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்த நிகழ்ச்சியை GKNM Hospital தலைமை செயல் அதிகாரி Dr. ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார். அவருடன் IOP மருத்துவ இயக்குனர் Dr. ராகவேந்திரா, மூத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுப்பது, அதை கட்டுப்படுத்துவது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக BP பரிசோதனை, உணவுத்துறை ஆலோசனை, பிசியோதெரபி துறையின் உடற்பயிற்சி ஆலோசனை, கண் சிகிச்சைத் துறை ஆலோசனை மற்றும் மாற்று மருத்துவத் துறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



மே 18ஆம் தேதி இதயத் துறை, சிறுநீரகத் துறை, பொது மருத்துவத் துறை, நரம்பியல் துறை மற்றும் கண் பரிசோதனைத் துறை மருத்துவர்களால் "உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம்" தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்துறை மருத்துவர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர்.



மே 19ஆம் தேதி இதயத் துறை மற்றும் பொது மருத்துவத் துறை மருத்துவர்களின் உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மே 20ஆம் தேதி மாற்று மருத்துவத் துறையினரால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் உடற்பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், "உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு சாதாரண நோயாக மட்டும் அல்ல; அது வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய ஒரு நிலை. சரியான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, மனஅழுத்த கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தனர்.



மேலும், பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் GKNM Hospital தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச ஆலோசனை முகாம்களை நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...