கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.


கோவை: கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அந்த சிறுமிக்கு நீதி கேட்டு கோவையில் உள்ள ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

குழந்தையின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.



சமூகத்தில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் மக்களுக்காக இயங்கி வரும் இந்தக் காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்கள், தங்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். "ஒரு பிஞ்சு குழந்தைக்கு இப்படிப்பட்ட கொடுமை எப்படி நடந்தது?" என்ற வேதனையும், கோபமும் கலந்து அவர்களின் முகங்களில் வெளிப்பட்டது.

இந்த நிகழ்வில், குற்றவாளிகளுக்கு POCSO சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்க வேண்டும், இனி எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற கொடுமை நேரக்கூடாது என்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி நிகழ்வு, ஒரு சாதாரண அஞ்சலியாக இல்லாமல், "குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என்ற சமூகத்தின் மனவேதனையை வெளிப்படுத்தும் உருக்கமான தருணமாக மாறியது.

"பெற்ற மனம் பதறுகிறது… பிஞ்சு உயிரின் அலறலுக்கு சட்டம் மிகக் கடுமையான நீதியை வழங்கட்டும்!" என்ற வாசகத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

சூலூர் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...