திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்று வந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்குவது மற்றும் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என விக்னேஷ் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாற்று ஊழியர்கள் மூலம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை 15 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் திறந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அரசு வழங்கியுள்ள கால அவகாசத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டு குழு ஆலோசித்து முடிவு செய்யும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்குவது மற்றும் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என விக்னேஷ் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாற்று ஊழியர்கள் மூலம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை 15 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் திறந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அரசு வழங்கியுள்ள கால அவகாசத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டு குழு ஆலோசித்து முடிவு செய்யும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.