கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்றும் புதுமைக் கருத்துகளை காட்சிப்படுத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. பதிவுக்கு பேராசிரியர் அசாருதீனை 98946 41102 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


கோவை: தூய்மையான ஆற்றல் மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் குறித்த சர்வதேச மாநாட்டை ஒட்டி, சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 முதல் 5 வரை கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கோவை மாவட்டம் சார்பில் சிறந்த அறிவியல் சிந்தனை கொண்ட கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

உலகளாவிய சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் புதிய போக்குகள் மற்றும் மாற்றத்திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கில், மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (HVL) மற்றும் கோவை தொழில்நுட்பக் கல்லூரி (CIT) இணைந்து, 2026 ஜூன் 3 முதல் 5 வரை CIT வளாகத்தில் 4வது "தூய்மையான ஆற்றல் மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் குறித்த சர்வதேச மாநாடு (AMCEHA 2026)" நடத்துகின்றன.


புதுமைகாண் அமர்வு நடைபெறும்




இந்த சர்வதேச மாநாட்டில் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநாட்டின் கருப்பொருளை மையமாகக் கொண்டு "புதுமைகாண் அமர்வு" (Innovation Showcase) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் தலைவர் Dr. கலைச்செல்வி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. இதில் சிறந்த அறிவியல் சிந்தனை மற்றும் புதுமைக் கருத்துகளை காட்சிப்படுத்தும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அனைவரும் பங்கேற்கலாம்




இந்த நிகழ்வில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அசாருதீனை 98946 41102 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

தூய்மையான ஆற்றல் மற்றும் சுகாதார தொழில்நுட்பங்களில் புதுமையான சிந்தனைகளை முன்வைப்பவர்களுக்கு இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாக அமையும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...