கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கோவை விமான  நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஹாங்காங் செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 



இந்த தகவலின் பேரில், விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, டெல்லியை சேர்ந்த ராகுல் மாலிக் மற்றும் ராகேஷ் குமார் என்ற இருவரிடம் 1.35 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 25 ஆயிரம் யூரோக்கள் இருப்பது தெரியவந்தது.

முறைகேடாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக கூறி அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளின் இந்திய மதிப்பு சுமார் 1.04  கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...