உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW Foundation இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் புகையிலை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.


Coimbatore: உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. மதுவிலக்கு மற்றும் மருந்துகள் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் (DTCC) மற்றும் CSW Foundation ஆகியவை இணைந்து ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்தன.




இந்நிகழ்ச்சியில் கலால்துறை ஆணையர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புகையிலை மற்றும் நிக்கோட்டின் பொருட்களின் தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். "புகையிலை பயன்பாடு இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் இந்த ஆபத்தான பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.




மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மாவட்ட ஆலோசகர் Dr. சரண்யா தேவி, சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன், உளவியலாளர் தௌபீக், CSW Foundation அறங்காவலர் பாசில் ரகுமான், துணைத் தலைவர் திலீப் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




பேரணியில் நர்சிங் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். "புகையிலை இல்லாத இந்தியா", "ஆரோக்கியமான வாழ்க்கை நமது உரிமை" போன்ற கோஷங்களை எழுப்பி பகுதி வழியே அணிவகுத்துச் சென்றனர். பேரணியின் முடிவில், அனைத்து பங்கேற்பாளர்களும் புகையிலை மற்றும் போதைப் பொருட்களிலிருந்து விலகி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புகையிலை இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவதாகவும், குறிப்பாக கல்வி நிறுவனங்களில் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...