கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு, வெள்ளிச் சங்கிலி மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.47 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் வெள்ளிச் சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் சம்பந்தப்பட்ட நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கதிர் (20) என்ற கல்லூரி மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி-டெக் ஐடி படித்து வருகிறார். கடந்த ஜூன் 5-ம் தேதி தனது நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த அவரை ரிஸ்வான், சாஹிர், ஜெகநாத் மற்றும் அபுஸ் ஆகிய நான்கு பேர் திடீரென சூழ்ந்து மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மண்டியிடுமாறு மிரட்டியுள்ளனர்.

மேலும் அவர்களில் ஒருவர் கத்தி வைத்திருப்பதாகக் கூறி கடுமையாக மாணவரை அச்சுறுத்தியுள்ளனர். பயந்து போன மாணவர் அவர்கள் கூறியபடி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.47,000 ஐ அவர்கள் குறிப்பிட்ட கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

பணம் மட்டுமல்லாமல், குற்றவாளிகள் அவரிடம் இருந்த ஒரு வெள்ளிச் சங்கிலி மற்றும் Vivo T2 Pro செல்போனையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

மாணவர் கதிர் அளித்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் கொள்ளை, மிரட்டல் மற்றும் சொத்து அபகரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் மேற்கொண்ட தீவிர வேட்டையில் குற்றச்சாட்டுக்குள்ளான நான்கு பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள ஒரு குற்றவாளியை கைது செய்ய போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...