கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) காலை 9 முதல் மாலை 5 வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், அப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதி:

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், Housing Board, A.R. நகர், தமாமி நகர், Driver காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், Union ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மாதம்பட்டி பகுதி:

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், மாதம்பட்டி, ஆலந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திப்பாளையம், பேரூர், கவுண்டனூர், களம்பாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மருதூர் பகுதி:

மருதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கரம்பாளையம், கரிச்சிப்பாளையம், கன்னார்பாளையம், கலட்டியூர், பொஜங்கனூர், M.G.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

தேவராயபுரம் பகுதி:

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், J.N.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

பெரியநாயக்கன்பாளையம் பகுதி:

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்கலிப்பாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

பவானி அணை பகுதி:

பவானி அணை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தேக்கம்பட்டி, நஞ்சையகவுண்டன்புதூர், சுக்கு காப்பி கடை, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டம்பாளையம், தொட்டதாசனூர், ராமையகவுண்டன்புதூர், உப்புப்பள்ளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொண்டாமுத்தூர் பகுதி:

தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், உளியம்பாளையம், தாளியூர், கெம்பனூர், முத்திப்பாளையம், காளிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம், சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவசர பணிகள் காரணமாக மின்சாரம் முன்கூட்டியே வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...