மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு தடையின்றி பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழவு அமராவதி பழைய ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



விவசாயிகள் அளித்த மனுவில், காரத்தொழவு பகுதியில் அமைந்துள்ள ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வாய்க்காலை நம்பியுள்ள சுமார் 12 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நஞ்சை நிலங்கள் போதிய பாசன வசதி பெற முடியாமல் உள்ளதாகவும், இதன் காரணமாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், வாய்க்காலில் படிந்துள்ள மணல் மற்றும் புதர்களால் நீரோட்டம் தடைபட்டு, நிலங்களுக்கு தண்ணீர் சீராக சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் முறையான சாகுபடி மேற்கொள்ள முடியாமல் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீரோட்டத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரத்தொழவு அமராவதி பழைய ராஜவாய்க்கால் நீரை பயன்படுத்தும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...