கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமார் தப்பி ஓடிய நிலையில், அவரை பந்தயசாலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமார் என்பவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பந்தயசாலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிம்முடு அஜித்குமார், கார் விற்பனை தொடர்பான தகவல்களை சேகரித்து, அவற்றை தனது கார் என்பதுபோல் OLX செயலியில் பதிவேற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் முன்பணமாக பணம் பெற்று மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் மீது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திராவில் கைது செய்யப்பட்டபோது உடல்நலக்குறைவு இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழகத்திற்கு வந்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் இதேபோன்ற முறையில் கார் விற்பனை செய்வதாகக் கூறி இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் போலீசார் அவரை கைது செய்து, கடந்த வாரம் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்தபோது உடல்நலக்குறைவு இருப்பதாக தெரிவித்ததால், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று மாலை கைதிகள் வார்டில் இருந்து பிம்முடு அஜித்குமார் தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே ஆந்திரா போலீசாரை ஏமாற்றி மருத்துவமனையில் இருந்து தப்பிய அதே பாணியில், தற்போது தமிழக போலீசாரையும் ஏமாற்றி தப்பிச் சென்றிருப்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பந்தயசாலை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...