வால்பாறையில் காட்டுயானை தாக்கி காவலாளி பலி



வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் பாபு (50).  இவர் வழக்கம் போல் நேற்று இரவு எஸ்டேட் மருத்துவமனை அருகாமையில் உள்ள மருத்துவர் குடியிருப்பில் காவல் பணியில் இருந்தபோது நள்ளிரவில் ஒற்றை யானை ஒன்று மெயின் கேட் வழியாக உள்ளே நுழைந்து பாபுவை தாக்கியுள்ளது. 



இதனிடையே, அங்கிருந்த மருத்துவர் யானையின் அழறல் சத்தத்தைக் கேட்டு பயத்தில் வீட்டின் உள்ளேயே இருந்துள்ளார். தொடர்ந்து, மருத்துவர் கைபேசியில் அழைப்பு விடுத்த போது பாபுவின் கைபேசி செயல் இழந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவர் அதிகாலையில் வெளியே வந்து பார்த்த போது காலாளி பாபுவைக் காணவில்லை. வீட்டியின் அருகாமையில் இரத்தக்கறை இருப்பதை கண்டவுடன் பொதுமக்கள் உதவியுடன் தேடி பார்த்தபோது அருகாமையில் உள்ள பல்லத்தில் பாபு உடல் முழுவதும் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.



இதுகுறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து, ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் காவல்துறையினர் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மேலும், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, முருகாளி எஸ்டேட் தொழிலாளர்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்கள் உடமைக்கும், உயிருக்கும் நிரந்தரமான பாதுகாப்பு வழங்க எஸ்டேட் நிறுவாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...