கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட புதிய டயாலிசிஸ் மையம் ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 நோயாளிகள் இலவசமாக பயனடைந்து வருகின்றனர் என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சீத்தாலட்சுமி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிறுநீரக நோயாளிகளுக்கான புதிய டயாலிசிஸ் மையம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்ட இந்த மையத்தில் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட பொதுமக்கள் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினரால் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் இரு வேலைகளில் 20 நோயாளிகள் இந்த மையத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழலில் இயங்கி வரும் இந்த மையத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையம் செயல்படுகிறது.

பொதுமக்கள் 9498599703, 9159557631 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...