அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாக திமுக எம்.பி திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாகவும், எப்போது தமிழகத்திற்கு தேர்தல் நடந்தாலும், இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக பொறுப்பிற்கு வருமென திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் திமுக சார்பில் இந்தி திணிப்பை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், போக்குவரத்து கழக ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், தமிழக அரசு பிடிவாதம் கட்டுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மோனா ரயில் திட்டத்திற்கு ஆதரவாக மெட்ரோ திட்டத்தை கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் சென்னை முழுமைக்கும் மெட்ரோ இரயில் இயக்கப்பட்டு இருக்குமெனவும், மதுரை, கோவை, திருச்சியிலும் மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழக அரசை மத்திய அரசு கைப்பாவையாக இயக்குகிறதோ, இல்லையோ தமிழகத்தில் அரசு இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாக திருச்சி சிவா தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் மக்கள் நலனை பேணவில்லை எனவும், அமைச்சர்கள் அதிமுக இணைப்பையும், வழக்குகளையும் பற்றி மட்டுமே கவலைப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாகவும், எப்போது தமிழகத்திற்கு தேர்தல் நடந்தாலும், இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக பொறுப்பிற்கு வருமென திருச்சி சிவா தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, பாராட்டும், மகிழ்ச்சி் எனவும் பதிலளித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி வைரவிழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடந்து வருவதாகவும், தமிழகத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு தேசிய தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழக அரசிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் நீட் தேர்வை நிறுத்தி இருக்க முடியுமெனவும், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இப்பிரச்சணைக்கு தீர்வு காண தமிழக அரசிற்கு தெரியவில்லை எனவும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...