அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாக திமுக எம்.பி திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாகவும், எப்போது தமிழகத்திற்கு தேர்தல் நடந்தாலும், இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக பொறுப்பிற்கு வருமென திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் திமுக சார்பில் இந்தி திணிப்பை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், போக்குவரத்து கழக ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், தமிழக அரசு பிடிவாதம் கட்டுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மோனா ரயில் திட்டத்திற்கு ஆதரவாக மெட்ரோ திட்டத்தை கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் சென்னை முழுமைக்கும் மெட்ரோ இரயில் இயக்கப்பட்டு இருக்குமெனவும், மதுரை, கோவை, திருச்சியிலும் மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழக அரசை மத்திய அரசு கைப்பாவையாக இயக்குகிறதோ, இல்லையோ தமிழகத்தில் அரசு இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாக திருச்சி சிவா தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் மக்கள் நலனை பேணவில்லை எனவும், அமைச்சர்கள் அதிமுக இணைப்பையும், வழக்குகளையும் பற்றி மட்டுமே கவலைப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதாகவும், எப்போது தமிழகத்திற்கு தேர்தல் நடந்தாலும், இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக பொறுப்பிற்கு வருமென திருச்சி சிவா தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, பாராட்டும், மகிழ்ச்சி் எனவும் பதிலளித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி வைரவிழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடந்து வருவதாகவும், தமிழகத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு தேசிய தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழக அரசிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் நீட் தேர்வை நிறுத்தி இருக்க முடியுமெனவும், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இப்பிரச்சணைக்கு தீர்வு காண தமிழக அரசிற்கு தெரியவில்லை எனவும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...