மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு

மதுபானக் கடை மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மனு அளிக்க வந்த அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கூறுகையில்,

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்பட்டு வந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் திறக்க மதுபானக் கடை நிர்வாகமும், அரசு நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடையின் பூட்டை உடைத்தும், மது பாட்டில்களை உடைத்தும் போராட்டம் செய்து வருகின்றனர்.

கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது, அங்கு பணிபுரிவோர் மீதும் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் பாதிப்படைந்த மதுபானக் கடை ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்த இடத்திலேயே அரசு மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில் மதுபானக் கடை மற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப், பாட்டாளி தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...