ஆர்.எஸ். புரம் மற்றும் ஹோப் காலேஜ் பகுதியில் 46 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கோவை மாநகராட்சி 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டது. இத்தடை உத்தரவினை மீறி மாநகராட்சியின் எல்லைக்குள் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கும் அவற்றை கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், உபயோகிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சுமார் 377 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.



மேலும், அதனை தொடர்ந்து இந்த வாரமும், ஐந்து மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆய்வில் மேற்கு மண்டலமான 23-வது வார்டு பகுதி ஆர்.எஸ். புரம் திவான் பதூர் (டி.பி) சாலையில் 25 கிலோ மதிப்பில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர். மொத்தம் 3000 ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் இந்த ஆய்வினை மேற்கொண்டார்.



அதேபோல், கிழக்கு மண்டலம் 37-வது வார்டு அவிநாசி சாலையில் உள்ள ஹோப் காலேஜ் பகுதியில் கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் மணிவண்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டத்தில் 21 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனை செய்தவர்களிடம் ரூபாய் 12,500 வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டது.





Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...