கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சுய விவரங்களை பதிவு செய்தனர். ஜூலை 31 வரை Self Enumeration பணி நடைபெறும்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று (17.07.2026) Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில், மாமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்தனர்.




இன்றைய தினம் 17.07.2026 தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை Self Enumeration எனப்படும் சுய கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இந்த பணியின் போது பொதுமக்களிடம் 33 கேள்விகள் கேட்கப்படும். கட்டடம் மற்றும் வீட்டின் விவரங்கள், தண்ணீர் வசதி, மின்சாரம், கழிவறை, டிஜிட்டல் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு மக்கள் தாங்களாகவே பதில்களை பதிவேற்றம் செய்துகொள்ளும் வகையில் Census 2027 வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, கணக்கெடுப்பு பணிக்காக வீடு வீடாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை தருவார்கள். அப்போது SEID ஐடியை தெரிவிக்கும் போது, அதில் விடுபட்டிருக்கும் கேள்விகளை வீடு தேடி வரும் அலுவலர்களிடம் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதன் மூலம் Census குறித்து அனைத்து தகவல்களும் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்படும்.


முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, "ஒவ்வொரு வீடும் சேர்க்கப்பட வேண்டும். நமது Census, நமது வளர்ச்சி. தங்களின் தகவல் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...