கோவையில் நடைபெறும் 17வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் கண்காட்சியில் 600 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் - இண்டெக் தலைவர் சுந்தரம்

17-வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி வரும் ஜூன் 1ம் தேதி முதல் முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கண்காட்சி தொடர்பாக இண்டெக் தலைவர் சுந்தரம் கூறும்போது, ஜூன் 1- ம் தேதி துவக்க விழாவில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார். வர்த்தகர்களுக்கான பார்வை நேரம் காலை 10 முதல் 2 மணி வரையும் பொதுமக்கள் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

22000 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரங்குகள் அமைக்கபட்டு 536 நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இதில், இந்தியா மட்டுமின்றி ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, தைவான், சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் துறையினர் இந்த சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 50,000 வர்த்தக பார்வையாளர்கள் இக்கண்காட்சிக்கு வருகைதருவர் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 375 கோடி வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு 600 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

இயந்திர உற்பத்தியில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் முன்னிலையில் உள்ளன. அந்த நாடுகள் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்சாலைகளை இந்தியாவில் துவக்கி வருகிறது. இந்தியாவில் ரோபோட்டிக்ஸ் தயாரிப்பு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பிற்கு பின் தற்போது தொழில்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் புதிய தொழில் துறையினர் 40 பேர் தங்கள் தயாரிப்புகளை கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு தனி அரங்கு ஒதிக்கீடு செய்யபட்டுள்ளது. தற்போது தொழில் துறையினர் தொழில் துவங்க மூப்பேரிபாலையம் பகுதியில் 240 ஏக்கர் பரப்பளவிலும், செட்டிபாளையம் பகுதியில் 150 ஏக்கர் அளவில் தொழிற்பேட்டையும் அமையவுள்ளது. இதில், 300 தொழிற்சாலைகள் துவங்கபட்டு 12000 பேர் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள். வரும் ஜூன் மாதம் இந்த தொழிற்பேட்டைகள் துவங்கப்பட ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...