அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் - காவல் ஆய்வாளர் தென்னரசு வேண்டுகோள்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் முழுநிலவு விழிப்புணர்வுக் கூட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாய்க்கனூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு பயிற்சி மைய தன்னார்வலர் பயிற்றுனர் பத்மாவதி அனைவரையும் வரவேற்றார். கோடாங்கி பட்டி ஊராட்சி பொறியாளர் முத்துக்குமரன் வாழ்த்துரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆழியார் துணை காவல் ஆய்வாளர்கள் டி.தென்னரசு, சின்னசாமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பின், ஆழியார் துணை காவல் ஆய்வாளர் டி.தென்னரசு பேசும் போது, கிராமப்புறங்களில் குழந்தைகள் சரிவர படிக்கவில்லை என்றால் வீட்டு வேலைகளுக்கு,  தோட்டம், பன்னையத்து வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதன் காரணமாக குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.

கல்வி அறிவு பெறாத குழந்தைகள் பெற்றோர்கள் செய்யும் தொழிலையே செய்யக் கூடிய சூழல் உருவாகிறது. இதன் காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெற்றோர்கள் குடும்ப சூழலை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதால் ஒரு தலை முறையை மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன், களப் பணியாளர் சரோஜா உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நிகழ்ச்சி மேலாளர் ஜே.இ.பீஜீ அலெக்ஸ் நன்றி கூறினார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...