கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்கு மற்றும் மத்திய மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் மத்திய மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத், ஆகியோர், இன்று (28.07.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24க்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில், இலட்சுமி நகர் முதல் கொடிசியா சாலை வரை இணைப்புச் சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்தும், வார்டு எண்.59-க்குட்பட்ட சிங்காநல்லூர், கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்தும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.



அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மத்திய மண்டலம் வார்டு எண். 62க்கு உட்பட்ட சாரமேடு, நஞ்சுண்டாபுரம் சாலை விரிவாக்க பணிகள் தொடர்பாக பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

இவ்வாய்வுகளின் போது, கணக்குகள் குழுத்தலைவர் தீபா தளபதி இளங்கோ, நகரமைப்பு அலுவலர் தாமோதரன், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன் (பொ), சரவணக்குமார் (பொ), மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி நகர திட்டமிடுநர் சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர்கள் சந்திரன், குணசேகரன், உதவி பொறியாளர்கள் ஃபர்மான் அலி, கமலக்கண்ணன், சுந்தர்ராஜன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...