கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் தூய்மைப் பணிகளை நேரில் சென்று கண்காணித்தார். சாலையோர போஸ்டர் அகற்றல் மற்றும் சாக்கடை சுத்தம் பணிகள் மேற்பார்வையிடப்பட்டன.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27-ன் கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு முருகன் கோவில் வீதி பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக்கடையை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, உணவுப் பொருட்களின் இருப்பு நிலை மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்படும் முறை குறித்து விரிவாக ஆராய்ந்தார்.






கடையில் இருந்த பொது மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்த கவுன்சிலர், அரசு நிர்ணயித்த அளவில் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்தார். நியாய விலைக்கடை நடைமுறைகளில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் கடையின் செயல்பாடுகளை கண்காணித்தார்.






அதே நாளில், பீளமேடு நவ இந்தியா பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றும் பணியையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் மேற்பார்வையிட்டார். இந்தப் பணியின்போது, வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படாத வகையில் போஸ்டர்களை சுத்தம் செய்யுமாறும், அகற்றப்பட்ட போஸ்டர்களை சாலையோரத்தில் போடாமல் உடனடியாக எடுத்துச் செல்லுமாறும் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.






மேலும், பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் சாக்கடை மண்களை அகற்றும் பணியும் இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்து, சாக்கடையில் தேங்கியிருந்த மண்கள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதி செய்தார். சாக்கடை அடைப்புகளால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.


Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...