கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார். விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Coimbatore: இந்திய அரசு 2027ஆம் ஆண்டு குடியரசுதின விழாவில் வழங்கவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு இந்திய அரசாங்கம் பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்குகிறது.

இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படுகின்றன. மேன்மை பொருந்திய பணிகளை செய்து சாதனை படைத்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களை https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பெற்று, ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு தொடர்பான விண்ணப்பங்கள் மட்டும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெறப்படும்.

விளையாட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதன் மூன்று நகல்களுடன் ஜூலை 31, 2026க்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், கோவை மாவட்டம் அவர்களிடம் நேரில் வந்து சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரைகளுடன் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....