கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கோவை: கோவை உக்கடம் பகுதியில், இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கின் நிதிப் பின்னணி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள், இன்று காலை முதல் மேலும் ஐந்து பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்புகளின் நிதிப் பரிவர்த்தனைகள், சர்வதேச பணப் பரிமாற்றங்கள் மற்றும் கார்ட்டெல் நிதி வலையமைப்புகள் தொடர்பான கோணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக, உக்கடம் பகுதியில் வசித்து வரும் பெரோஸ், நவாஸ், புக்கு சதாம், அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரின் வீடுகளில், மத்திய பாதுகாப்புப் படையினரின் ஆயுதப் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையின்போது, வங்கி கணக்கு ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள், வெளிநாட்டு பணப் பரிமாற்றப் பதிவுகள், செல்போன்கள், மடிக்கணினிகள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, இதே வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த அசாருதீன் என்பவரின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஐந்து பேரின் வீடுகளுக்கு சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனுடன், கோட்டைமேட்டில் நடைபெற்ற கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான நிதி எவ்வாறு திரட்டப்பட்டது, அதற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நிதி ஆதரவு இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், உக்கடம் பகுதியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் இடங்களில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...