ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தேசிய தரநிர்ணயச் சான்றிதழ் (என்ஏபிஎச்)

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, இந்திய தரக் கவுன்சில் வழங்கும் அங்கீகாரச் சான்றினை பெற்றுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கவனிப்பு தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்எல்) இதை வழங்கியுள்ளது.

மருத்துவமனைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் குறித்து, மருத்துவமனையை நிர்வாகித்து வரும் எஸ்என்ஆர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயக்குமார் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக படிப்படியான வளர்ச்சியை எட்டி வரும் இந்த மருத்துவமனைக்கு, நோயாளிகளின் கவனிப்புக்கு இந்த சான்றால் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, திறன் போன்றவைகளில் என்ஏபிஎச் நிர்ணயித்த தரத்தில் எங்களது சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,” என்றார்.

என்ஏபிஎச், சான்றுக்கான தேவையான முறைகளில், மருத்துவமனையின் சீரிய நிர்வாகம், தீ விபத்திலிருந்து பாதுகாப்பு, பேரிடர் கையாளும் திறன், தொற்று நோய் தடுப்பு பயிற்சிகள், செவிலியர் அழைப்பு முறைகள், கருவிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோயாளிகளின் கருத்துக்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான தரச்சோதனைகள், பணியாளர் திருப்திபோன்றவை மருத்துவமனையின் தரமான செயல்பாடுகளாக மட்டுமின்றி, நிலையானதாகவும் இருக்கும் என்ற உறுதியை அளித்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு நிர்ணயங்களை மிகவும் சரியாக அளிக்க இந்த என்ஏபிஎச் சான்று, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. தரமான சிகிச்சை அளிப்பதால், வாழ்க்கையை வளமிக்க நலமானதாக மாற்றுவதோடு மட்டுமின்றி, பல்வேறு சமுதாய சேவைகளையும் மேற்கொண்டு பல சாதனைகளையும் படைத்துள்ளது. எட்டு மணி நேரத்தில் உடல் உறுப்பு தான உறுதி மொழியை அதிகம் பெற்று கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...