தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு கற்பூர தீபாராதனை காட்டி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளையொட்டி இன்று (ஆகஸ்ட் 3), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் அரசு விழாவாக ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில், கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு கற்பூர தீபாராதனை காட்டி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தனின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.



நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபஸ்ரீ சரத், 33-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எ. கிருஷ்ணமூர்த்தி, மாநகரத் தலைவர் கே. சுபாஷ், மாநகரப் பொருளாளர் வடவள்ளி ரவி, மாநகர துணைத் தலைவர் சிக்கன் சின்னத்தம்பி, மாநகரச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்சியின் மாநகர துணைச் செயலாளர் கவுண்டம்பாளையம் சீனிவாசன் செய்திருந்தார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஈரோடு மாவட்டம், ஓடநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...