தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை: கோவை மாநகர B3 வி.எச். ரோடு புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டு பதிவான 100 கிராம் தங்க நகை வழிப்பறி வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அசோக் நகரைச் சேர்ந்த செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், அவரது ஊழியரிடம் 100 கிராம் தங்க நகையை கொடுத்து பொன்னையராஜபுரத்தில் உள்ள குளோபல் நக்ஷத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நண்பரிடம் ஒப்படைக்க அனுப்பியிருந்தார். அப்போது, குடியிருப்பு அருகே வந்தபோது இருவர் கத்தியை காட்டி 100 கிராம் தங்க நகையை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் B3 வி.எச். ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வலையபன் மற்றும் தெளபீக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, வழக்குப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதல் குற்றவாளியான வலையபன் 2023-ஆம் ஆண்டு உயிரிழந்ததால், இரண்டாவது குற்றவாளியான தெளபீக் மீது மட்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம், தெளபீக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...