கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை பிரித்தெடுப்பு குறித்து அறிவுறுத்தினார். டெங்கு ஒழிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.


Coimbatore: மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா அவர்கள் இன்று (10.08.2026) மத்திய மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

வார்டு எண் 48-ல் அமைந்துள்ள காந்திபுரம், 100 அடி சாலை, 2வது வீதி, லட்சுமி நகர், Dr இராதாகிருஷ்ணன் சாலை ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆணையர் ஆய்வு செய்தார். தூய்மைப் பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

காந்திபுரம் 2வது வீதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். அப்பகுதி பொதுமக்களிடம் தண்ணீர் விநியோகம் முறையாக செய்யப்படுகிறதா என்பதையும், தெரு விளக்குகளில் ஏதேனும் பழுதுகள் உள்ளதா என்பதையும் நேரடியாக கேட்டறிந்தார். மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதே பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாகவும் ஆணையர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். டெங்கு கொசு புழு இருப்பிடங்களை நேரில் பார்வையிட்டு சரிபார்த்தார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் கணேசன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...