முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகள் பயணிகளின் வீடுகளுக்கு நேரில் விநியோகிக்கப்படும் - "கேஷ் ஆன் டெலிவரி" திட்டம் அறிமுகம்

இனி, முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகள் , பயணிகளின் வீடுகளில் நேரில் விநியோகிக்கப்படும் போது கட்டணம் செலுத்தும் வசதியை ரயில்வே நிர்வாகம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, நெட்பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக கட்டணத்தை செலுத்தும் வசதி மட்டுமின்றி, டிக்கெட்டை பெறும்போது பணத்தை செலுத்தும், "கேஷ் ஆன் டெலிவரி" திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி கூறியதாவது:- ஐஆர்சிடிசி இணையதளத்திலும், செல்லிடப் பேசி செயலியிலும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணி ஒருவர், டிக்கெட்டை மேற்கண்ட முறைகள் மூலம் முன்பதிவு செய்யும்போது இனிமேல் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, முன்பதிவின்போது பயணியால் அளிக்கப்படும் முகவரியில் டிக்கெட் நேரில் விநியோகிக்கப்படும்போது கட்டணத்தை அளித்தால் போதும். அந்த கட்டணத்தை ரொக்கமாகவோ, டிஜிட்டல் முறையிலோ அளிக்கலாம்.

முகவர், ரயில்வே கவுண்ட்டர் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முறையில் இருந்து பயணிகள் தாமாகவே இணையத்தில் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியை பெறுவதற்கு, பணம் செலுத்துவதற்கான வழிகளில் ஒரேயொரு முறை மட்டும், டிக்கெட் வீடுகளில் நேரில் விநியோகிக்கும்போது கட்டணம் செலுத்தும் வசதி என்பதில் தங்களை சேர்க்க வேண்டும்.

இந்த வசதியை பெறுவதற்கு, வடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண் அல்லது பான் எண்ணை ஐஆர்சிடிசியில் பதிவு செய்திருக்க வேண்டும். 

ரூ.5 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.90 கட்டணமாக பெறப்படும். ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.120 கட்டணமாக பெறப்படும். ஒருவேளை பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகள், தங்களது வீடுகளில் விநியோகிக்கப்படும் முன் ரத்து செய்ய விரும்பினால், அதற்காக விநியோக கட்டணம், ரத்து செய்வதற்கான கட்டணத்தை தனியே அளிக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...