கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கான தொடக்க மற்றும் அறிமுக நிகழ்ச்சியை MBA கருத்தரங்க அரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியில் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


Coimbatore: கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலத்தின் சார்பில், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான தொடக்க மற்றும் அறிமுக நிகழ்ச்சி 31.08.2026 அன்று MBA கருத்தரங்க அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புல முதன்மையர் Dr. V. ஜனக மாயா தேவி வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தலைவர் Dr. R. வசந்தகுமார் தொடக்கவுரையாற்றினார். துணைவேந்தர் Dr. S. ரவி மற்றும் பதிவாளர் Dr. B. V. பிரதீப் ஆகியோர் வாழ்த்துரையாற்றி புதிய மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இசைத்துறை முதுநிலை மாணவர்களின் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மற்றும் பரதத்துறை முதுநிலை மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று பார்வையாளர்களை கவர்ந்தன. நிகழ்ச்சியின் இறுதியில் இசைத்துறைத் தலைவர் Dr. சஜிதா சுகு பி. நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...