சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 159 சீட்டுகள் மற்றும் ரூ.3,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாடியதாகக் கூறப்படும் 6 பேர் கொண்ட கும்பலை காட்டூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 159 சூதாட்ட சீட்டுகள் மற்றும் ரூ.3,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் சிலர் கும்பலாக கூடி பணம் வைத்து சூதாடுவதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை சுமார் 4.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது, அங்குள்ள மறைவான இடத்தில் 6 பேர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் பி.என். பாளையம் பேரநாயுடு தெருவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் (40), ரத்தினபுரி லட்சுமிபுரம் தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் (51), மணியகாரம்பாளையம் பூசாரிபாளையத்தைச் சேர்ந்த ஹரிஹசா (66), கரும்புக்கடை சாரமேடு முக்தார் மசூதி தெருவைச் சேர்ந்த ஷாஜகான் (39), காந்திபுரம் 100 அடி சாலையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (65) மற்றும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பள்ளம்பட்டியைச் சேர்ந்த சக்திவேலவன் (47) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 159 சீட்டுகள் மற்றும் பந்தயத் தொகையாக வைத்திருந்த ரூ.3,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசதீஷ்கண்ணன் தமிழ்நாடு விளையாட்டு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...