அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவற்றை அச்சிடும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்குப் போக்குவரத்துத் துறையிலேயே மாற்றுப் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) ஆகியவை டிஜிட்டல் முறையில் வழங்கப்பட உள்ள நிலையில், கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் அவற்றை அச்சிடும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றுகளை டிஜிட்டல் முறையில் பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படும்.
இந்த மாற்றம், நீண்ட காலமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகளை அச்சிடும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்களிடையே வேலைவாய்ப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் தெரிவித்துள்ளதாவது, 1998-ஆம் ஆண்டு முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் Elcot மற்றும் Bonton நிறுவனங்களின் கீழ் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான பணிகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகளை அச்சிடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்தப் பணியை நம்பியே தங்களது குடும்ப வாழ்வாதாரம் இருந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால் தற்போதைய அச்சிடும் பணிகளுக்கான தேவை குறையும் சூழல் உருவாகலாம் எனக் கூறியுள்ள ஊழியர்கள், திடீரென வேலைவாய்ப்பு இல்லாமல் போனால் தங்களது குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
எனவே, தற்போதைய பணிகளுக்கு மாற்றாக போக்குவரத்துத் துறையிலேயே தங்களுக்கு ஏதேனும் பொருத்தமான பணியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக போக்குவரத்துத் துறையின் சேவைகளில் தாங்கள் பணியாற்றி வருவதைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் மாற்றத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றுகளை டிஜிட்டல் முறையில் பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படும்.
இந்த மாற்றம், நீண்ட காலமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகளை அச்சிடும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்களிடையே வேலைவாய்ப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் தெரிவித்துள்ளதாவது, 1998-ஆம் ஆண்டு முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் Elcot மற்றும் Bonton நிறுவனங்களின் கீழ் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான பணிகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகளை அச்சிடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்தப் பணியை நம்பியே தங்களது குடும்ப வாழ்வாதாரம் இருந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால் தற்போதைய அச்சிடும் பணிகளுக்கான தேவை குறையும் சூழல் உருவாகலாம் எனக் கூறியுள்ள ஊழியர்கள், திடீரென வேலைவாய்ப்பு இல்லாமல் போனால் தங்களது குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
எனவே, தற்போதைய பணிகளுக்கு மாற்றாக போக்குவரத்துத் துறையிலேயே தங்களுக்கு ஏதேனும் பொருத்தமான பணியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக போக்குவரத்துத் துறையின் சேவைகளில் தாங்கள் பணியாற்றி வருவதைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் மாற்றத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.