கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவானந்தா காலனி வரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பங்கேற்ற வண்ணமயமான ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
கோவை:பட்டு உடைகள், மயிலிறகு கிரீடம் மற்றும் புல்லாங்குழலுடன் கிருஷ்ணர் வேடத்திலும், பாரம்பரிய அலங்காரங்களுடன் ராதை வேடத்திலும் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது.

இன்று, செப்டம்பர் 4, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோவையில்கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நடைபெற்ற வண்ணமயமான ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பங்கேற்றனர்.
ரத்தினபுரி பகுதியில் உள்ள சாஸ்திரி ரோட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மருதக்குட்டி வீதி, தயிரிட்டேரி வழியாக சிவானந்தா காலனியை சென்றடைந்தது. வழிநெடுகிலும் குட்டி கிருஷ்ண ராதை போல அலங்கரிக்கப்பட்ட குழந்தைகள் பக்தி கோஷங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து,சிவானந்தா காலனியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணர் பாடல்கள் மற்றும் ஆன்மீக பக்திப் பாடல்களுக்கு குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
விழாவின் நிறைவில், ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு அமைப்பாளர்கள் சார்பில் சிறப்புப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
“குழந்தைகளிடம் ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் நோக்கம்”

நிகழ்ச்சியின்போது விஸ்வ ஹிந்து பரிஷத் தர்ம யாத்திரா தென் தமிழக அமைப்பாளர் சிவலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார், விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கோவையில் தொடர்ந்து 14-ஆவது ஆண்டாக கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
குழந்தைகளிடம் ஆன்மீக சிந்தனையை வளர்ப்பதுடன், மதமாற்றத்தைத் தடுப்பது, அன்பு, நல்லொழுக்கம் மற்றும் தீண்டாமையற்ற சமூகத்தை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த விழா நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய தலைவர் அசோக் சிங்காலின் 100-வது ஆண்டு விழாவும் இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பள்ளிப் பருவத்திலேயே போதிய விழிப்புணர்வு இல்லாதது காரணமாக நாட்டில் பாலியல் குற்றங்கள் மற்றும் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆன்மீகத்தையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்கள் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விலகி, பெண்களை மதிக்கும் உயரிய எண்ணத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று, செப்டம்பர் 4, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோவையில்கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நடைபெற்ற வண்ணமயமான ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பங்கேற்றனர்.
ரத்தினபுரி பகுதியில் உள்ள சாஸ்திரி ரோட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மருதக்குட்டி வீதி, தயிரிட்டேரி வழியாக சிவானந்தா காலனியை சென்றடைந்தது. வழிநெடுகிலும் குட்டி கிருஷ்ண ராதை போல அலங்கரிக்கப்பட்ட குழந்தைகள் பக்தி கோஷங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
ஊர்வலத்தைத் தொடர்ந்து,சிவானந்தா காலனியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணர் பாடல்கள் மற்றும் ஆன்மீக பக்திப் பாடல்களுக்கு குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
விழாவின் நிறைவில், ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு அமைப்பாளர்கள் சார்பில் சிறப்புப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
“குழந்தைகளிடம் ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் நோக்கம்”
நிகழ்ச்சியின்போது விஸ்வ ஹிந்து பரிஷத் தர்ம யாத்திரா தென் தமிழக அமைப்பாளர் சிவலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார், விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கோவையில் தொடர்ந்து 14-ஆவது ஆண்டாக கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
குழந்தைகளிடம் ஆன்மீக சிந்தனையை வளர்ப்பதுடன், மதமாற்றத்தைத் தடுப்பது, அன்பு, நல்லொழுக்கம் மற்றும் தீண்டாமையற்ற சமூகத்தை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த விழா நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய தலைவர் அசோக் சிங்காலின் 100-வது ஆண்டு விழாவும் இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பள்ளிப் பருவத்திலேயே போதிய விழிப்புணர்வு இல்லாதது காரணமாக நாட்டில் பாலியல் குற்றங்கள் மற்றும் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆன்மீகத்தையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்கள் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விலகி, பெண்களை மதிக்கும் உயரிய எண்ணத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.