வால்பாறை பகுதியில் கன மழை பெய்துவருவதால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது சமவெளிப் பகுதியைச் சார்ந்தவர்களே. 

கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் சமவெளிப்பகுதிகளில் சில மாதங்களாக மழை பொய்த்துப்போய் இருந்ததாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைபிரதேச பகுதிகளில் பெய்யும் மழை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்ததால் வால்பாறையில் உள்ள அனைத்து ஆறுகளும் வறண்டு காணப்பட்டன. வறட்சியின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வால்பாறையில் குறைந்து காணப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை முதல் வால்பாறைக்குட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வால்பாறை சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் மட்டுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள சோலையாறு, சின்னக்கல்லார், நீரார் உள்ளிட்ட அணைகள் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...