கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா செப்டம்பர் 17, 2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்ட நேரம், உடையாம்பாளையம் நட்சத்திரா கார்டன் ஓடை மழைநீர் வடிகால், திருமலை நகர் உள்விளையாட்டு அரங்க பராமரிப்பு, காந்திநகர் மின் கம்பங்கள் மாற்றமைப்பு, சின்னவேடம்பட்டி இணைப்பு சாலை விரிவாக்கம் ஆகியவை குறித்து ஆய்வு செய்து, திட்டமதிப்பீடு தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



செப்டம்பர் 17, 2026 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சரியான நேரத்தில் வருகிறதா என மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.13க்குட்பட்ட உடையாம்பாளையம், நட்சத்திரா கார்டன் ஓடை பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான உரிய திட்டமதிப்பீடு தயாரிக்கவும், அதே வார்டுக்கு உட்பட்ட திருமலை நகரிலுள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் பராமரிப்பு பணிகளுக்கு உரிய திட்டமதிப்பீடு தயாரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கட்டா ரவி தேஜா அறிவுறுத்தினார்.



பின்னர், வார்டு எண்.12க்குட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மாற்றியமைக்க சாத்தியகூறு தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின், சின்னவேடம்பட்டி, உடையாம்பாளையம் சந்திப்பு பகுதியில் இணைப்பு சாலை விரிவாக்கம் தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.

தேவதாஸ் இந்த ஆய்வுகளின்போது உதவியாக இருந்தார். உதவி ஆணையர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர்கள் சுமதி, இராமமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் அபிஷ்ராஜ், கோபிநாத், கணேசன், சுகாதார ஆய்வாளர் சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...