தெற்கு ரயில்வேயின் முதுநிலை துணைப் பொதுமேலாளர் பொறுப்பேற்பு

ஜே.பி.பாண்டே தெற்கு ரயில்வேயின் முதுநிலை துணைப் பொதுமேலாளராகவும், தலைமை கண்காணிப்பு அதிகாரியாகவும், இன்று பொறுப்பேற்றார். அவருக்கு முன்னர் முதுநிலை துணைப் பொதுமேலாளராக பொறுப்பில் இருந்த ஆர்.முகுந்தன் ரயில்வே பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றதால், பாண்டே அப்பொறுப்பில் ரயில்வே வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாண்டே, கட்டுமானப் பொறியியலில் ரூர்கி ஐஐடியில் பி.டெக் பட்டமும், டெல்லி ஐஐடியில் எம்.டெக் பட்டமும் பெற்றுள்ளார். 1985ம் ஆண்டு ரயில்வேயின் பொருட்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தெற்கு ரயில்வேயில் பொறுப்பேற்கும் முன் மேற்கு ரயில்வேயின் பாவ்நகர் கோட்டத்தின் ரயில்வே கோட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.

வடக்கு ரயில்வே மற்றும் வடமத்திய ரயில்வேயின் தலைமைப் பொருள்கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், வடமத்திய ரயில்வேயின் ஜான்சி கோட்டத்தில் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். 

மேலும் பாண்டே, 1998ம் ஆண்டில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலும், 2009-ம் ஆண்டில் சிங்கப்பூர் லீ குவான் யூ பொதுக் கோட்பாடு பல்கலைக் கழகத்திலும், 2015ம் ஆண்டு இத்தாலியில் உள்ள போக்கியோனி மேலாண்மைப் பல்கலைக் கழகத்திலும் சிறப்புப் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...