உதகை மலர் கண்காட்சி இறுதி நாளில் குவியும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கோடை காலத்தை முன்னிட்டு 121-வது மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் துவங்கப்பட்டது.

இந்த மலர் கண்காட்சியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், 150 வகைகளைச் சேர்ந்த 5 லட்சம் பூக்கள் மற்றும் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. 



மேலும் ஒரு லட்சம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை கோயில், 6 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட பறவை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மலர் கண்காட்சியை காண கண்காட்சி துவங்கப்பட்ட நாள் முதலே மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.



உதகை மலர் கண்காட்சியின் இறுதி நாளான இன்றும் தமிழகம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர்.

இதனால், உதகை, நீலகிரிக்கு உட்பட்ட பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஏராளமான காவல்துறையினர் உதகையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...