வனச்சகர அலுவலர் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா



28 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நேரடி நியமனம் வாயிலாக பணியமர்த்தப்பட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 39 வனச்சரக அலுவலர்களுக்கான 2015-17 வனச்சரக பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தில் நடைபெற்றது.

அதிக வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டுமென்ற நோக்கில் 1948 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பொறுப்பில் சென்ற கோவை தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகம் சார்பில் உதவி வனப்பாதுகாவலர் நிலைக்கு கீழ்ப்பட்ட வன அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பை 1990-ஆம் ஆண்டில் மாநில அரசின் பொறுப்புக்கு வந்தது.



அதில் தமிழ்நாடு, கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், கர்நாடகம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 18 மாத பயிற்சியானது மத்திய அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தின் படியும் 19 பாடங்கள் மற்றும் அதுதொடர்பான பயிற்சி கடந்த 2015 ல் துவஙப்பட்டு, பயிற்சி காலத்தில் நாட்டில் மிக முக்கியமான வன சூழல் பகுதிகளுக்கு 146 நாட்கள் கல்வி பயணம் மேற்கொண்டு வனப்பாதுகாப்பு முறைகள் குறித்து கற்றனர்.

மேலும், 10 நாட்கள் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படைப்பிரிவிலும் 8 நாட்கள் கோவை மத்திய தனி பாதுகாப்பு காவல் படைப்பிரிவிலும் சிறப்பு அதிரடி பயிற்சி வழங்கப்பட்டது. 2015-17 ஆண்டின் முடிவில் 6 பெண்கள் உட்பட 39 பயிற்சியாளர்களுக்கு வனச்சகர அலுவலர் பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இந்த சான்றிதழ் வழங்கும் விழாவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட வனத்துறை அலுவலர் ராம சுப்ரமணியன் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.

இதில், கேரள மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து 13 பேரும், தமிழகத்தில் இருந்து 5 பேரும், மத்திய பிரதேசத்திலிருந்து 4 பேரும், உத்தரகாண்ட்டில் இருந்து 3 பேரும் மற்றும் கர்நாடகாவில் இருந்து ஒருவரும் என 26 பேர் வனத்துறை அமைச்சரிடம் இருந்து இந்த சான்றிதழை பெற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...