திராவிட நாடு, தனிதமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது- பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்

திராவிட நாடு, தனிதமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டியளித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறியதாவது:-

மிருகவதை தடுப்புச் சட்டம் தமிழகத்தில் தவறாக முன்னிறுத்தப்படுகிறது. மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்வதை வரைமுறைப்படுத்தவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாட்டு இறைச்சி சாப்பிடவோ, பயனில்லாத மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தவோ எந்த தடையும் இல்லை.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரை சுற்றியே அரசியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருவரும் சந்தித்ததாக கூறப்படுவது அதிகாரப்பூர்வமற்ற தகவல்.

தனியார் பால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாலில் இரசாயன கலப்பு இல்லை என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பால் தரம் குறித்த சோதனை உண்மையா அல்லது வெற்று சவாலா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். 

திராவிட நாடு, தனி தமிழ்நாடு போன்ற பிரிவினைவாத கருத்துகளுக்கு இளைஞர்கள் ஆட்பட்டு விடக்கூடாது. தொடர்ந்து பிரிவினைவாத கருத்துக்களையும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விஷ கருத்துக்களையும் பரப்பி வந்ததாலேயே மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவை பாஜக சைவ நாடாக மாற்ற முயற்சிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்-யை பாஜக இயக்கவில்லை. 

மத்திய அரசின் நலத்திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு உண்டு. தமிழக பாஜக தொடர்ந்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. 

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தரக்கூடாது என கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கம்யூனிஸ்ட்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...