ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என கோவையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊடகங்களிடம் புலம்பும் ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருக்க தகுதியற்றவர் எனவும், திராணி, தைரியம் இருந்தால் கலப்பட பால் நிறுவனங்களை அவர் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் செதியாளர்களிடம் தெரிவித்தார்.



கோவையில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவையில் அதிகளவு உற்பத்தி செய்யபடும் மோட்டார் பம்ப்செட் தயாரிப்பில் 3 விதமான ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகின்றது. இதே போன்று பல்வேறு தொழில்களில் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்ல முடியாத அரசாக கையாளாகாத அரசாக தமிழக அரசு உள்ளது. 

தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 79 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னரே தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து இருக்கிறது. இரு கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்திற்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் தனியாக கட்டுப்பாடில்லாமல் லஞ்சம் வாங்குகின்றனர். அதிகாரிகள் மட்டத்திலும் லஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நிலையில் உள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...