கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி

கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட 46 பேருக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான காசோலை சம்மந்தப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிறைத்துறை சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வழக்குகளுக்கு ஏற்றவாறு 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இந்த நிதி உதவி மண்டல நன்னடத்தை அலுவலர் அறிக்கையின் படி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. நிதி உதவி பெருவோர் பட்டியலை வெளியிடுவார்.

அதன்படி, கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறைத்துறை சரக துணை தலைவர் அறிவுடை நம்பி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி உதவி வழங்கும் விழாவில், சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 46 பேரின் 30 வழக்குகளுக்கு ரூ.16 லட்சம் வழங்கப்பட்டது.

பெரும்பாலும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எதிர்கால தேவைகளுக்கு பயன்படும் நோக்கில் இந்த திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில், சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்டல நன்னடத்தை அலுவலர் சூர்யமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...