கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளை பிடிக்கும் பணியினை மேற்கொண்டு, விதி மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களால், குழு அமைக்கப்பட்டு அதன் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் பல்வேறு அறிவுறுத்தலுக்கு பின்னறும் முறையாக பராமரிக்காமல் பொது மக்களுக்கு இடையூராக சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், பிடிக்கப்பட்ட கால்நடைகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிமையாளர்கள் திரும்ப பெறாவிட்டால் அவற்றை மாநகராட்சியின் மூலம் நரசிபுரம் கிராமத்தில் செயல்படும் வெள்ளிங்கிரி கோசாலையில் விடப்படவேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்தப் பணிக்காக மாநராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களால், அமைக்கப்பட்ட குழு பற்றிய விவரம்:

1. மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி மற்றும் அதன் அறிக்கையினை ஆணையர்க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

2. சுகாதார ஆய்வாளர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக செயல்பட்டு ஆய்வின் போது மண்டல சுகாதார அலுவர்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும்.

3. மாநகர நல அலுவலர், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவர்களாக செயல்பட்டு மண்டல சுகாதார அலுவலர்கள் சமர்பிக்கும் அறிக்கையினை ஒருங்கிணைத்து ஆணையர் மற்றும் துணை ஆணையர்க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வுத்தரவு உடன் அமலுக்கு வருகிறது. மேலும், அந்தந்த  மண்டலத்திலுள்ள சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு அந்தந்த மண்டல குழுவே பொறுப்பேற்க வேண்டும். என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...